இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். காவல்துறையினரும், குழந்தைகள் நலவாரிய அதிகாரிகளும் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கழிவறைக்கு செல்லும் மாணவிகளை மடக்கி பிடித்து அவர்கள் பின்னாடியே சென்று அவர்களுக்கு ஆபாச படங்களை கட்டாயப்படுத்தி காட்டி தவறாக நடந்து வந்துள்ளார். பல்வேறு மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் வழக்கு பதிவி செய்து அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.