தமிழகத்தில் ஆறாவது முறையாக முதல்வர் பதவியேற்ற ஜெயலலிதா, முதல்கட்டமாக டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தை இரண்டு மணி நேரமாக குறைக்கவும், தமிழகம் முழுக்க சுமார் 500 கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் மதுக்கடைகளை காலை 10 மணிக்கு திறப்பதற்கு பதிலாக 12 மணிக்கு திறப்பதாலும், 500 கடைகளை மூடுவதாலும், அரசுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாது.
காரணம், டாஸ்மாக் கடைகளில் மாலை விற்பனை தான் அதிகம், காலை நேரத்தில் விற்பனை குறைவே. இதனால், அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்படலாம். அப்படியே இருந்தாலும், ஓரு ஆண்டுக்கு 300 கோடி வரை மட்டுமே வருமானம் இழப்பு ஏற்படும்.