நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வியாழன், 22 ஜூலை 2021 (12:30 IST)
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பிற மாவட்டங்களில் மேகமூட்டம் மற்றும் சிறிய அளவிலான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்