இதனையடுத்து இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் எதிரையை போல நடந்துகொள்ளும் சூழல் நிலவி வருகிறது. தமிழர்களின் வாகனங்களை தாக்குவதும், எரிப்பதும், தமிழக மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என கர்நாடக மக்கள் அத்துமீறி நடந்துகொள்கின்றனர்.
காவிரி பிரச்சனை தொடர்பாக இரு மாநிலங்களிலும் நிலவும் கலவர போக்கு மாறி அமைதியும், ஒற்றுமையும் ஏற்படுத்த வழிபாடு செய்ய ராமேஸ்வரம் வந்த கர்நாடக பக்தர்களை பூரணகும்ப மரியாதை கொடுத்து ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சியினர் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சுவாமி தரிசனம் செய்த கர்நாடக பக்தர்களை அவர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.