முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்! – அலுவலகங்களுக்கு உத்தரவு!

புதன், 29 ஜூன் 2022 (13:06 IST)
தமிழ்நாடு முழுவதும் கொரோனா காரணமாக முகக்கவசம் அவசியமாக்கப்பட்டுள்ள நிலையில் அலுவலகங்களில் முழு நேரமும் முகக்கவசம் அணிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

நீண்ட நாட்களுக்கு பின் தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு 1,500ஐ நெருங்கியுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் முதல் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகங்களில் கிருமி நாசினி உள்ளிட்டவற்றையும் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்