தமிழ்நாட்டில் தற்கொலை தடுப்புப் படை: கமல்ஹாசன் கோரிக்கை

புதன், 20 ஜூலை 2022 (12:42 IST)
தமிழ்நாட்டில் தற்கொலை தடுப்பு படை அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
 
 மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடப்பது போலவே பதின்ம வயது மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பதை கண்டறிய வேண்டும் என்றும் இதற்காக தற்கொலை தடுப்பு படை ஒன்றை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
நாளை வரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரண செய்தி இல்லாமல் இருக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கமல்ஹாசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்