தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா: முதலிடத்தில் சென்னை!

திங்கள், 13 ஏப்ரல் 2020 (08:47 IST)
தமிழகத்தில் ஒரே நாளில் 106 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 106 அதிகரிந்து 1075 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை 10லிருந்து 11 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து 39 ஆயிரத்து 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 50 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 199 கொரோனா பாதிப்புகளும், கோவையில் 149 தொடர்ந்து ஈரோடு ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்