ஒலிம்பிக்கில் மாஸ் காட்டும் தமிழக வீரர்கள், வீராங்கனைகள்! – 5 பேர் தேர்வு!

செவ்வாய், 6 ஜூலை 2021 (12:42 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 5 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 முதல் தொடங்கி நடைபெற உள்ளன. இதில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில் தமிழகத்திலிருந்து 5 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கணை ரேவதி, திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலெட்சுமி, இவர்களுடன் சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்