இதில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அந்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் பேச்சு அமெரிக்க எம்.பி.க்களை வசீகரித்துள்ளது. 66 முறை கைதட்டி எம்.பி.க்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், இளங்கோவன் மோடியை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். அரசின் செயல்பாடுகளையும், கொள்கை ரீதியாகவும் விமர்சனம் செய்வதை பாஜக வரவேற்கிறது. நாட்டின் பிரதமரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி பேசுவது நாட்டையே அவமானப்படுத்தும் செயல் என்பதை இளங்கோவன் உணர வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி ஆகியோரையும் இளங்கோவன் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். என்னைப் பற்றி பேசும்போது தமிழிசையா? தமிழ் வசையா? என அநாகரிகமான முறையில் விமர்சித்துள்ளார். நாகரிக அரசியலை அவர் கற்றுக் கொள்ள வேண்டும்.