தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!

புதன், 12 ஜனவரி 2022 (13:34 IST)
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
காவிரி டெல்டா மாவட்டங்கள் தென்கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தற்போது தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி தமிழ்நாட்டில் இன்று கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஜனவரி 13, 14 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்