இன்று, மார்ச் 6ஆம் தேதி, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். ஆனால், மார்ச் 7, 8, 9 ஆகிய நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கலாம்.
மேலும், மார்ச் 10 முதல் 12 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஆனால், மார்ச் 10ஆம் தேதிக்கு முன்பாக அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்றும் வறண்ட வானிலை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.