இந்நிலையில், இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வெப்பம் காணப்படுகிறது. குறிப்பாக, ஏழு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. ஈரோடு, கரூர், மதுரை, திருப்பத்தூர், வேலூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இனிவரும் நாட்களிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.