சட்டசபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக ஓளிபரப்ப முடியாது: தமிழக அரசு

Mahendran

செவ்வாய், 23 ஜனவரி 2024 (16:33 IST)
சட்டசபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக ஓளிபரப்ப முடியாது என  சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் வாதம் செய்துள்ளார்.
 
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக்  கோரிய வழக்கின்  விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் வாதம் செய்தார். 
 
அவரது வாதத்தில் சட்டசபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக ஓளிபரப்ப முடியாது  என்றும் குறிப்பாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் விஷயங்களை நேரலையாக ஒளிபரப்புவது சரியாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
 
மேலும் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், பட்ஜெட் உரைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என்றும் கூறிய வழக்கறிஞர் அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் ஏன் நேரடி ஒளிபரப்புக்கு அனுமதிக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்