இந்நிலையில், ஜெயலலிதாவை வரவேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் காத்திருக்கின்றனர்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.வினரை உள்ளே விட காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜெயலலிதா பிற்பகலில் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது. விமானம் மூலம் சென்னை வரும் ஜெயலலிதாவை வரவேற்க அ.தி.மு.க.வினர் மீனம்பாக்கத்தில் இருந்து போயஸ் கார்டன் வரை சாலையின் இரு பக்கமும் காத்திருக்கின்றனர்.