கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சென்னை மேற்கு மாம்பலத்திலிருந்து, ரூ.80 கோடி மதிப்புள்ள 8 பஞ்சலோக சிலைகளை கடத்தி வந்த பெரம்பலூரைச் சேர்ந்த தனலிங்கம் என்பவரை கைது செய்தனர். அவர், நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், திருடப்படும் சிலைகள் அனைத்தும், இயக்குனர் வி.சேகர் வீட்டில் வைத்து பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்தார்.