இது குறித்து விவரித்த அந்த நபர், சுவாதி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது வந்த ஒருவர் சுவாதியின் தலைமுடியை பிடித்து அவரை நிமிர்த்து பிடித்ததாகவும், மற்றொருவர் சுவாதியை வெட்டியதாகவும் கூறினார்.
நன்றி: Red Pix
குழந்தைகள், குடும்பம் இருப்பதால் தனக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக போலீசில் கூறவில்லை என அந்த நபர் கூறியதாக வழக்கறிஞர் கூறினார். எனவே இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் இருப்பதால் இதனை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.