சுதாகரனும் சரண் அடைகிறார் - அவகாசம் வழங்க நீதிமன்றம் மறுப்பு

புதன், 15 பிப்ரவரி 2017 (18:33 IST)
நீதிமன்றம் அவகாசம் வழங்க மறுத்ததையடுத்து சுதாகரனும் நீதிமன்றத்தில் விரைவில் சரண் அடைய உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேர் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் உடல் நிலை சரியில்லை எனக் கூறி, அவர்களின் வழக்கறிஞர், வாய் மொழியாக 4 வாரங்கள் அவகாசம் கேட்டார். ஆனால் அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
 
இதனையடுத்து இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ராஹர கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று மாலை 5 மணியளவில் சரணடைந்தனர். 
 
ஆனால், சுதாகரன் மட்டும் இன்னும் அங்கு சென்று சரணடையவில்லை என்ற தகவல் வெளியானது. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் சரண அடைய அவகாசம் வேண்டும் எனக் கூறி பெங்களூரு கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் சுதாகரன் மனு தாக்கல் செய்துள்ளார் என்ற வெளியானது. அதன் பின் ஒரு நாள் கழித்து, அதாவது நாளை அவர் நீதிமன்றத்தில் சரண் அடைவார் என செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், அவரது கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்ததால், வேறு வழியின்றி சுதாகரனும் சரண் அடைவதற்காக நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது..
 

வெப்துனியாவைப் படிக்கவும்