சுப்பிரமணியன் சாமி மீது மேலும் இரண்டு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தார் ஜெயலலிதா

செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (13:39 IST)
சுப்பிரமணியன் சாமி மீது ஜெயலலிதா தரப்பில் மேலும் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
 
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக டுவிட்டரில் அவதூறு செய்தி வெளியிட்டதாக அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் ஜெயலலிதா தரப்பில் தொடரப்பட்டன.
 
இந்த மூன்று வழக்குகளிலும் அவர் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
 
இந்நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மேலும் இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த இரண்டு வழக்குகளையும் சேர்த்து இதுவரை சுப்பிரமணியன் சாமிக்கு எதிராக 5 அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்