மாணவர்கள் விடுமுறை எனக் கருதாமல் படிக்க வேண்டும் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

திங்கள், 17 ஜனவரி 2022 (17:33 IST)
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு மேல் நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது.

இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பின்னர் அமைச்சர் பொய்யாமொழி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:  வரும் 31 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும மாணவர்கள் இதை விடுமுறை எனக் கருதாமல் கல்வித்தொலைக்காட்சி மூலமாகவும் ஆசியரியர்கள் மூலமாக  தொடர்ந்து படிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்