8வது நாளாகத் தொடரும் புதுச்சேரி மாணவர்கள் போராட்டம்

திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (15:09 IST)
புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 8வது நாளாகத் தொடர்கிறது.
 

 
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் 3 ஆயிரம் மாணவர்கள் தங்களது 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்யக் கோரியும் கடந்த 27ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
போராட்டத்தின் 8ஆம் நாளான இன்று, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்