மீடியா என சொல்லி நுழைந்த ஆசாமி; சட்டமன்றம் முன்பு தீக்குளிக்க முயற்சி! – சென்னையில் பரபரப்பு!

வியாழன், 9 செப்டம்பர் 2021 (08:27 IST)
பத்திரிக்கையாளர் என சொல்லி சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைந்த நபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கூட்டத்தொடர் நடந்து வந்த நிலையில் அங்கு வந்த ஆசாமி ஒருவர் தன்னை பத்திரிக்கையாளர் என கூறி முதல் கேட்டை கடந்துள்ளார். இரண்டாம் கேட்டில் அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளனர்.

உடனே தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க அந்த நபர் முயன்றுள்ளார். உடனே தாவி சென்ற போலீஸார் அவர் மேல் தண்ணீர் ஊற்றி தடுத்து காவல்நிலையம் தூக்கி சென்றுள்ளனர்.

விசாரணையில் அவர் தஞ்சாவூரை சேர்ந்த ஆறுமுகம் என்று தெரிய வந்துள்ள நிலையில் தீக்குள்ளிக்க முயன்றது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்