இதனையடுத்து, தமிழகம் முழுக்க நமக்கு நாமே என்ற பயணத்தை செப்டம்பர் 21ஆம் தேதி கன்னியாகுமரியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். இந்த பயணம் 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டு, 234 தொகுதிகளுக்கும் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.
அப்போது, மக்களின் நீண்ட நாள் பிரச்சினைகள், தீர்கப்படாத குறைகள் போன்றவற்றை முன்வைத்து சிறப்புறையாற்ற உள்ளார். நவம்பர் 8ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இந்த பயணம் நிறைவு பெறுகிறது.