ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை உடைக்க ஆள் அனுப்பினார்: பொளந்து கட்டிய ஆர்த்தி

வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (19:00 IST)
அதிமுக நட்சத்திர பேச்சாளரான நடிகை ஆர்த்தி மு.க.ஸ்டாலின் தான் செம்பரம்பாக்கம் ஏரியை உடைக்க ஆள் அனுப்பியதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.


 
 
வரலாறு காணாத சென்னை மழை வெள்ளத்தின் போது கேரள மசாஜ் செண்டரில் போய் படுத்த ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை உடைக்க ஆள் அனுப்பினார் என்ற ஆர்த்தி, திமுக மாணவர்களுக்கு 4ஜி சேவை வழங்குவதாக கூறியதை 2ஜி-யை வைத்து கிண்டலடித்து பேசினார்.

 

நன்றி: newsglitz
 
மேலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கிய அம்மாவுக்கு 4ஜி வழங்க தெரியாதா என்றார். மாணவர்களுக்கு எது தேவையோ அதை தான் அம்மா வழங்குவார் என்றார். இணைய வசதி இருந்தால் மாணவர்கள் படம் பார்ப்பார்கள், பாடல்கள் பதிவிறக்கம் செய்வார்கள், திமுக ஒரு தலைமுறையையே அழிக்க பார்க்கிறது என பேசினார் நடிகை ஆர்த்தி.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்