10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - சென்டம் விவரங்கள்

வியாழன், 21 மே 2015 (10:28 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில், ஒவ்வொரு பாடத்திலும் 100 க்கு 100 மதிப்பெண்களை பல மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
 
தமிழகம் முழுக்க 11, 15, 906 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 10 ம்வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியானது. தேர்வு முடிகளை அரசுதேர்வுகள்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டார். 
 
இதில், கணிதம் பாடத்தில் 27, 137 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்களை எடுத்துள்ளனர். அதே போல, அறிவியல் பாடத்தில் 1,15, 853 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். சமுக அறிவியல் பாடத்தில் 51 , 629 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்