சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜி. ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் க. அண்ணாதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக உள்ள க.அண்ணாதுரைக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.