இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

ஞாயிறு, 22 நவம்பர் 2015 (13:15 IST)
ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


 

 
தமிழக மீனவர்கள் நெடுந்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மீனவர்களிடம் இருந்த மீன்கள், நண்டுகள் ஆகியவற்றையும் அவர்கள் எடுத்துச் சென்றதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்