இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும், உடனே மீட்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இலங்கை ராணுவத்துக்கு, இந்தியாவில் பயிற்சி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, தமிழர்கள் நலனுக்கு எதிரானது. இதை தமிழர்கள் விரும்பமாட்டார்கள். எனவே, இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க கூடாது என்றார்.