ஆளுநர் உணர்ச்சிவசப்பட்டு, நடவடிக்கை எடுத்துவிட்டார், இப்போது உணர்ந்துவிட்டார்: சபாநாயகர் அப்பாவு

வெள்ளி, 30 ஜூன் 2023 (12:34 IST)
ஆளுநரை உணர்ச்சி வசப்பட்டு செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்து விட்டார் என்றும் ஆனால் தற்போது அவர் அதை உணர்ந்துவிட்டார் என்றும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது
 
அமைச்சரவையில் தலையிடும் அதிகாரம், இல்லை என்பதை ஆளுநர் உணர்ந்து கொண்டுள்ளார். ஆளுநர் உணர்ச்சிவசப்பட்டு, நடவடிக்கை எடுத்திருக்கலாம் 
 
அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என சமீபத்தில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களாகவே பதவியில் இருந்து நீங்கிவிடுவார்கள் என்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்