நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் கொலையாளியை ஏன் தடுக்கவில்லை, துரத்தி பிடிக்கவில்லை, சுவாதிக்கு உதவவில்லை என பல சர்ச்சைகள் எழுந்தன.
கூட்ட நெரிசலான ஒரு ரயில் நிலையத்தில் ஒருவன் புகுந்து ஒரு இளம் பெண்ணை படுகொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளான் என பலரும் கூறுகின்றனர். ஆனால் சம்பவம் நடந்த அன்று, அந்த நேரத்தில் என்ன நடந்தது, அங்கு எத்தனை பேர் இருந்தார்கள் என அப்போது அங்கிருந்த ஒருவர் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
தமிழ்ச்செல்வன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரும் தினமும் சுவாதி செல்லும் அதே ரயிலில் தான் பயணம் செய்கிறார். சம்பவம் நடந்த அன்று, அப்போது டப் டப் என சத்தம் கேட்டது.
அப்போது அங்கே 6, 7 பேர்தான் இருந்தார்கள். இரண்டு பெண்கள் அய்யோ, அய்யோ என கத்தினார்கள். கொலை செய்த அந்த வாலிபர் நடைமேடையில் வேகமாக சென்று கொண்டிருந்தார் அவரை ஒருவர் துரத்தினார்.