சிவசங்கர் பாபாவுக்கு மேலும் காவல் நீட்டிப்பு!

வியாழன், 22 ஜூலை 2021 (17:55 IST)
சிவசங்கர் பாபாவுக்கு மேலும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை சேர்ந்த மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா மீது மீண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஒரு வருடத்திற்கு ஜாமீன் கிடைக்காது என்பது ஒரு குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்பவர்கள் மீது தான் போக்சோ சட்டம் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றக் காவலில் இருக்கும் அவருக்கு இப்போது ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மேலும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்