சிறையில் சசிகலாவுக்கு அசைவு உணவு வழங்க தா.பாண்டியன் கோரிக்கை!

வியாழன், 23 பிப்ரவரி 2017 (13:20 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு களிக்கு பதிலாக அசைவு உணவு வழங்கப்பட வேண்டும் என இந்திய கம்யூணிஸ்ட் கட்சியை சேர்ந்த தா.பாண்டியன் கூறியுள்ளார்.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளும், உணவுகளும் தான் வழங்கப்படுகிறது என சிறைத்துறை தெரிவித்திருந்தது.
 
காலையில் சிறையில் கைதிகளுக்கு களி வழங்கும் நடைமுறை உள்ளது. சசிகலாவுக்கு வீட்டு உணவு மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கும் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு தான் வழங்கப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தா.பாண்டியன் சிறையில் சசிகலாவுக்கு அசைவு உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
 
முன்னதாக சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் அவரை போயஸ் கார்டனில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த தா.பாண்டியன் சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினர். இதனை கலாய்த்த நெட்டிசன்கள் தற்போது சசிகலாவுக்கு அசைவு உணவு வழங்க வேண்டும் என கூறியதையும் கலாய்த்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்