கோவையை அடுத்த துடியலூரில், காந்திய மக்கள் இயக்கம் மற்றும் அப்துல் கலாம் லட்சிய இந்தியா ஆகியவை இணைந்துள்ள மாற்று அரசியல் கூட்டணி சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளராக திருமலைராஜன் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து பேசிய தமிழருவி மணியன், ”இந்தியா சுதந்திரமடைந்து, 25 ஆண்டுகாலம் வரை, தமிழகத்தில் மதுவின் வாடையே இல்லை.
தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை ஏழு கோடிக்கும் மேல். இதில், ஒரு கோடி பேருக்கு மேல் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டனர். 1971ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மது விலக்கை தளர்த்தினார்.
அப்போது, அரசுக்கு வருமானம் ஆண்டுக்கு, 26 கோடி ரூபாய். ஆனால், இன்று வருவாய், 30 ஆயிரம் கோடி ரூபாய். தமிழ்நாட்டு மக்களை மதுவுக்கு அடிமையாக்கியதில் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் பங்குண்டு.