குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தபால் நிலையங்களில் ஏற்கனவே மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ல செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் ஆகிய இரு திட்டங்களில் சேரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களில் சேரும் குழந்தைகளுக்கு, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உருவம் பொறித்த தபால் கவரும், கடந்த சில தினங்களுக்கு முன்பு, வெளியிடப்பட்ட அவரின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையும், மேலும், அப்துல்கலாமின் வரலாறு அடங்கிய கையேடும் சிறப்பு பரிசாக வழங்கப்படும்.