ஈபிஎஸ் பகல் கனவு நிச்சயம் பலிக்காது: அமைச்சர் சேகர் பாபு

ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (11:19 IST)
தமிழக சட்டசபையை முடக்கி விடலாம் என்ற ஈபிஎஸ் காணும் கனவு பலிக்காது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
 
தமிழக சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கி விடுவார் என்று சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு தமிழக சட்டமன்றத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்றும் அதிமுகவின் ஆசையை அவர் மத்திய அரசுக்கு தனது பேச்சின் மூலம் மறைமுகமாக தெரியப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் 
 
சட்டசபையை முடக்கினால் தான் அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்