தவறாகக் குறிப்பிடப்பட்ட ஆண்டு வருமானம்… சீமான் மீண்டும் வேட்புமனுத்தாக்கல்!

புதன், 17 மார்ச் 2021 (12:12 IST)
சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் சீமான் தனது ஆண்டு வருமானத்தை தவறாகக் குறிப்பிட்டதை அடுத்து மீண்டும் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கிய நிலையில், முக்கிய கட்சிகள், கூட்டணிகளின் வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் சீமான் வேட்புமனுவில் தனது ஆண்டு வருமானம் 1000 ரூபாய் என்று குறிப்பிட்டு இருந்தார். இது சம்மந்தமாக வெளியான புகைப்படம் இணையத்தில் கேலிகளையும் மீம்ஸ்களையும் உருவாக்கியது.

இந்நிலையில் சீமானின் வருமானம் ஆண்டுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எனவும், ரூ.1,000 என்பது அவர் வருமான வரி கட்டிய தொகை என்பதும், எழுத்துப் பிழையாக தாக்கல் செய்யப்பட்டதால், அதை சரி செய்யும் விதமாக மீண்டும் சீமான் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என அவர் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்