கடந்த அதிமுக ஆட்சியின் போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் கலவரவம் வெடித்தது. இதில், அப்பாவி மக்கள் 13 பேர் தூப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக இருந்து அக்கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்துள்ள ராஜீவ்காந்தி இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆணையம் உண்மைத்தகவல் வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு சீமானிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், Mr.@SeemanOfficial தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உங்க சித்தப்பு பழனிச்சாமியும்,ஜெயலலிதா இறப்பில் உங்க சின்ன அத்தை சசிக்கலாவும் செய்த சதி வேலைகளை விசாரணை ஆணையங்கள் அம்பலபடுத்தியுள்ளது!!!
பெங்களூர் அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆனபின், சென்னை – தி நகர் இல்லத்தில் ,அவரை சீமான் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.