புதுவையிலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு!

ஞாயிறு, 7 நவம்பர் 2021 (17:53 IST)
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் புதுவையிலும் அதேபோல அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நான்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தமிழகத்தை போலவே புதுவையிலும் கனமழை காரணமாக நாளை, நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்