பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு..

Arun Prasath

செவ்வாய், 22 அக்டோபர் 2019 (15:47 IST)
தமிழகத்தில் 10.11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வு எழுதுவதற்கு இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த பொது தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதாவது இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுகிறது எனவும் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் எனவும் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்