சென்னையில் மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகள் சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ பணிகளுக்காக ‘டனல்’ என்ற ராட்சத சுரங்கம் தோண்டும் எந்திரம் தரைமட்டத்தில் இருந்து 30 மீட்டருக்கு அடியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மெட்ரோ ரெயில் அதிகாரிகள் ஆய்விற்கு பின்னர் பள்ளிக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணியின்போது மணல் வெளியேறி இருக்கலாம் என தெரிவித்தனர். இதனை அடுத்து பள்ளி மைதானத்தில் குவியளாக கொட்டி வைக்கப் பட்டுள்ள சுமார் 2 டன் அளவுள்ள மணலை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.