விழுப்புரம் மாவட்டத்தில், கோட்டகுப்பத்தில் குயின் மேரி என்ற தனியார் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் இனியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியை, கடந்த சனிக்கிழமை சிறப்பு வகுப்பு என்று கூறி தனது அறைக்கு அழைத்து சென்று பள்ளி தாளாளர் சிவக்குமார் (50) பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், உடல் நிலையில் மாற்றம் கண்ட இனியா, பள்ளிக்கு செல்ல மறுத்து, அங்கு நடத்தை கூறி அழுதுள்ளாள். உடனே, இனியாவை அவளது பெற்றோர்கள் ஒரு மருத்துவரிடம் அழைத்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.