சசிகலாவை பற்றி சசிகலா புஷ்பா சொன்னது நடக்கிறதா?

சனி, 24 செப்டம்பர் 2016 (15:42 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பேட்டி ஒன்றில் அதிமுக சின்னம்மா கைக்கு போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக கூறினார்.


 
 
இந்நிலையில் அவர் சொன்னது போலவே சில காட்சிகள் நடந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போக அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அவரை சந்தித்தேன் அவர் நலமாக உள்ளார் என பொன்னையன் சொன்னார். அமைச்சர்களும் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக கூறினர். ஆனால் ஜெயலலிதாவை அமைச்சர்கள், பொன்னையன் உள்ளிட்ட யாரும் சந்திக்கவில்லை என செய்திகள் வருகின்றன.
 
சசிகலா தான் அவ்வாறு ஊடகங்களுக்கு பேட்டியளிக்க அறிவுருத்தியதாக பேசப்படுகிறது. மேலும் தற்போது சசிகலா தான் அமைச்சர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருவதாகவும், அமைச்சர்களும் அவர் சொல்வதை ஆமோதித்து கேட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்