ஜெயலலிதா மறைந்த பிறகு பேச துவங்கிய நடராஜன்

புதன், 7 டிசம்பர் 2016 (17:30 IST)
ஜெயலலிதா மறைந்தாலும் அதிமுகவில் வெற்றிடம் இல்லை, அவரது புகழ் இருக்கும் வரை அதிமுக தொடரும் என்று அதிமுக பற்றி நடராஜன் பெருமிதமாக பேசியுள்ளார்.


 

 
நடராஜன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இன்றுவரை அவருக்கும் கட்சிக்குமான ஒரே தொடர்பு சசிகலா மட்டும்தான். இதுவரை அதிமுக பற்றியும் ஜெயலலிதா பற்றியும் பேச நடராஜன், ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் பெரிதும் அக்கரை உள்ளவர் போன்று பேசியுள்ளார்.
 
நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டியளித்த நடராஜன் கூறியதாவது:-
 
அதிமுகவில் வெற்றிடமே இல்லை. புரட்சித்தலைவி புகழ் இருக்கும் வரை அதிமுக தொடரும். புரட்சித்தலைவரை அடக்கம் செய்த பின்னர் யார் அடுத்த தலைவர் என்பதை நாங்கள் தான் தேர்வு செய்தோம். 
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதாவை அவர்கள் குழுதான் அதிமுகவின் தலைவராகவும், முதலமைச்சராகவும் உருவாக்கியது என்று பெருமிகதாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்