சசி. கும்பல் ஜெ.வுக்கு விஷம் வைத்துவிட்டது: ஆடியோ வெளியிட்ட வக்கீலுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்!

வெள்ளி, 9 டிசம்பர் 2016 (09:16 IST)
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் இருப்பதாக ஒரு அதிரடி ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
அந்த ஆடியோவில், ஜெயலலிதாவை மன்னார்குடி சசிகலா கும்பல் விஷம் வைத்து கொலைசெய்து விட்டதாக கூறியிருந்தார். மேலும் ஜெயலலிதாவின் சொத்துக்களை சசிகலா அபகரிக்க இருப்பதாகவும், ஜெயலலிதாவின் அனைத்து சொத்து விபரமும் தன்னிடம் இருப்பதாக கூறிய அவர் இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளார். மேலும் மரியாதையா சசிகலாவை போயஸ் கார்டனை விட்டு ஓடி போய்டு என்று கூறியிருந்தார்.

 

 
 
இந்நிலையில் இந்த ஆடியோ ஏற்படுத்திய பரபரப்பால் வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தியை சிலர் நேரில் சென்று மிரட்டியுள்ளனர். அவர் கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கவேண்டும் என மிரட்டியுள்ளனர்.
 
அதிமுகவை பத்தி பேச நீ யாரு? எங்களுக்கு தெரியும், யூனிஃபர்மை கழட்டிட்டு வா... உன்ன ஒரு வழி பன்னிடுரேன் என மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டல் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்