அவரது உடல்நிலை குறித்து பல்வேறு முரண்பாடான தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற விவாதங்களும் நடக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால் தற்போது தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற அவரது தோழி சசிகலா முயல்வதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.