இந்நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி தீபாவை பேட்டி எடுத்தது. இந்த பேட்டியை குறிப்பிட்ட தேதியில் ஒளிபரப்பாததால் அது சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலா தரப்பு இதில் தலையிட்டதாக கூறப்பட்டது. சசிகலா தரப்புக்கு அந்த பேட்டி போட்டுக்காட்டப்பட்டு அவர் அனுமதித்ததை மட்டும் தான் ஒளிபரப்பினார்கள் என்ற பேச்சும் நிலவி வந்தது.
இந்த பேட்டியில் தீபா, என்னை எனது அத்தையிடம் நெருங்க விடாமல் சிலர் தடுத்தனர் என கூற, குறுக்கிட்ட தொகுப்பாளர் தீபா, உங்களை ஏமாற்றுவது பெரிய காரியம் அல்ல, ஆனால் ஜெயலலிதாவை சுலபமாக ஏமாற்ற முடியுமா என கேட்டார்.