இலங்கை எம்.பி விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

வெள்ளி, 27 மே 2022 (23:20 IST)
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமுன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
குறித்த தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.இதனையடுத்து, சஷி வீரவன்ச தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணிகள் மூலம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை (30) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
 
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச, சில காலங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
 
இதனையடுத்து, அவரும் அவருடைய சகாக்களும், அரசாங்கத்தை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்