தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஒத்திவைப்பு!:

சனி, 5 நவம்பர் 2022 (11:45 IST)
தமிழகம் முழுவதும் 44 இடங்களில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அதனால் நாளை நடைபெற நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்மண்டல தலைவர் வன்னியராஜன் என்பவர் தெரிவித்துள்ளார் 

ALSO READ: 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு
 
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நான்கு சுவர்களுக்குள் நடத்த நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல என்றும் காஷ்மீர் கேரளா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அணிவகுப்பு பொதுவெளியில் தான் நடைபெற்றது என்றும் தென்மண்டல மேலாளர் வன்னியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்