அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

Mahendran

செவ்வாய், 9 ஜனவரி 2024 (13:39 IST)
அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000  வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 இதுவரை அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

சமீபத்தில் தமிழக அரசு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு சில நாட்கள் கழித்து ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்கான டோக்கன் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுபு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகைக்கு மற்றும் ரூபாய் ஆயிரம் ரொக்க பணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்