அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு: சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசித்ததாக தகவல்..!

சனி, 8 ஜூலை 2023 (12:45 IST)
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகலாந்தில் ஆளுநராகவும் , நாகா சமூக மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை குழுவின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்தும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்தும் மத்திய அமைச்சரிடம் ஆளுநர் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்