புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் - காவல்துறை உத்தரவு

வெள்ளி, 31 டிசம்பர் 2021 (17:36 IST)
இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதும் 700க்கும் அதிகமானவர்களுக்கு இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பல மாநிலங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் புத்தாண்டை கட்டுப்பாட்டுகளுடன் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் இன்று விசாரித்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளோடே புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட புதுச்சேரி யூனியனில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி யூனியனில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் எனவும்,  இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை  மதுபானக் கடைகள் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தங்கத்தின் விலை வாரங்க்களாக குறைந்து வந்த நிலையில் புத்தாண்டு   நெருங்கியுள்ளதை அடுத்து தற்போது மீண்டும் தங்க்கத்துன் விலை அதிகரித்துள்ளது.

மேலும் புதுச்சேரியில் மதுபானக்கடைகளை டிசம்பர் 31 மாலை 7 மணி முதல் அடுத்த நாள் புத்தாண்டு வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்